சிவில் வழக்குகளில் ஆவணங்களின் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க முடியுமா?
அசல் ஆவணங்களின் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும், புகைப்பட நகல்கள் பொதுவாக அசல் ஆவணங்களோடு ஒத்துப் போவதில்லை எனவும் கீழ்கண்ட வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு வட்டாட்சியர், பொன்னேரி வட்டம் Vs K. லீலம்மாள் மற்றும் பலர் (2000-1-LW-402)
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் Vs N. சுவாமிநாதன் மற்றும் பலர்
(2002-4-LW-147)
மீனாட்சியம்மாள் மற்றும் பலர் Vs கோபால கிருஷ்ணன் மற்றும் பலர்
(2004-3-CTC-481)
பொன்னம்பலம் Vs பிச்சை
(2008-2-LW-809)
மேலும் உச்சநீதிமன்றம் "ஷாலிகுமார் கெமிக்கல்ஸ் குவார்ட்ஸ் லிமிடெட் Vs சுரேந்திரா ஆயில் அண்ட் டால் மிக்ஸ்" என்ற வழக்கில், பதிவுச் சான்றிதழின் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்வதற்கு பிரதிவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், விசாரணை நீதிமன்றம் அந்த புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்வதற்கு அனுமதி அளிக்கக்கூடாது, மறு தரப்பினர் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் நீதிமன்றம் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்ய அனுமதிக்க கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே நீதிமன்றத்தில் ஆவணத்தின் புகைப்பட நகல்களை சான்றாவணங்களாக குறியீடு செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRP. NO - 1963/2013
dt - 1.6.2017
அவனி Vs சோமசுந்தரம் மற்றும் பலர்
2017-3-TNCJ-241
No comments:
Post a Comment