வழக்கறிஞர் ஆஜராகாவிட்டால் Exparte உத்தரவு பிறப்பிக்க கூடாது.
உச்சநீதிமன்றம் "மல்கெய்ட் சிங் Vs ஜோகிந்தர் சிங்(1997-3-CTC-SC-619)" என்ற வழக்கில் பத்தி 7ல்,ஒரு வழக்கு சம்மந்தப்பட்டவர்கள் வழக்கறிஞரை நியமித்துமுறையாக வழக்கு நடத்தி வரும் நிலையில் அவர்களுடையவழக்கறிஞர்கள் வழக்கு நடத்துவதிலிருந்து விலகிக்கொண்டால் (Reported No Instructions)வழக்கு நடத்துபவர்களுக்கு (Parties to the Suit)ஒரு அறிவிப்பினை நீதிமன்றம் அனுப்ப வேண்டும்.அவ்வாறு அறிவிப்பு அனுப்பாமல் வழக்கினைமேற்கொண்டு நடத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற வழங்கியிருந்த தீர்ப்பு - 2
அதேபோல் உச்சநீதிமன்றம் "சண்டிகர் அரசு Vs ரகுராஜ்(AIR-2009-SC-514)" என்ற வழக்கில், வழக்குசம்மந்தப்பட்டவர் தன்னுடைய வழக்கை நடத்துவதற்குவழக்கறிஞரை நியமித்து விட்டால் அந்த வழக்கறிஞரின்அந்த வழக்கில் ஆஜராக தவறிவிட்டால் அதற்காக வழக்குசம்மந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று தீர்ப்புகூறியுள்ளது.
எனவே ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதியின்வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது ஆஜராக தவறிவிட்டால் பிரதிவாதிக்கு நீதிமன்றம்ஒரு அறிவிப்பை அனுப்ப வேண்டும், மாறாக விசாரித்துஅல்லது பரிசீலித்து வழக்கில் தீர்ப்பளிக்க கூடாது எனசென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
O. S. A. NO - 391/2011
A. நாகராஜன் Vs P. P. M. கனகராஜ் 2013-1-MWN-CIVIL-867
No comments:
Post a Comment