Wednesday, 25 April 2018

உயிலை எழுதி வைப்பவர் உயிலில் கையொப்பம் இடுவதை சாட்சிகளும்,

உயிலை எழுதி வைப்பவர் உயிலில் கையொப்பம் இடுவதை சாட்சிகளும், உயிலில் சாட்சிகள் கையொப்பம் இடுவதை உயிலை எழுதி வைப்பவரும் நேரில் பார்த்திருக்க வேண்டுமா?

ஒரு உயிலின் மூலம் பயனடையக்கூடிய நபர்கள் அந்த உயில் எழுதப்பட்டுள்ளது மற்றும் சான்றுக் கையொப்பங்கள் இடப்பட்டுள்ளது போன்ற சங்கதிகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். உயில் எழுதப்படுவதும் (Execution) அந்த உயிலில் சான்றுக் கையொப்பம் இடப்படுவதும் (Attestation) வெவ்வேறான இரண்டு செயல்களாகும். ஒரு செயலை தொடர்ந்து மற்றொரு செயல் நடைபெறுகிறது. இந்திய வாரிசுரிமை சட்டம் பிரிவு 63(c) ல் கூறப்பட்டுள்ளவாறு ஒரு செயலும், சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 3 ல் கூறப்பட்டுள்ளவாறு மற்றொரு செயலும் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றுள்ளது என்பதை சட்டம் எதிர்பார்க்கிற வகையில் நிரூபிக்கப்பட வேண்டும். ஓர் உயிலில், உயிலை எழுதியவர் கையொப்பம் இட்டிருந்தாலும், அந்த உயிலில் சாட்சிகள் சான்று கையொப்பம் இட்டுள்ளதை நிரூபிக்காத நிலையில் அந்த உயிலை தகுதியான உயிலாக கருத முடியாது.

இந்திய வாரிசுரிமை சட்டம் பிரிவு 63(c) ல், உயிலில் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்ட சாட்சிகள் கையொப்பமிட வேண்டும் என்றும் அவர்களில் ஒவ்வொருவரும் உயிலை எழுதி வைப்பவர் உயிலில் கையொப்பம் இடுவதை அல்லது கைரேகை இடுவதை பார்த்தல் வேண்டும் அல்லது உயில் எழுதி வைத்தவருக்காக உயில் எழுதி வைத்தவரின் கட்டளையின் பேரில் அவரது முன்னிலையில் கையொப்பமிடும் நபரை, இந்த சான்று கையொப்பமிடும் சாட்சிகள் பார்த்திருக்க வேண்டும் அல்லது உயில் எழுதி வைத்தவரிடமிருந்து அவரது கையொப்பம் அல்லது கைரேகை அல்லது அவருக்காக கையொப்பமிடுபவரின் கையொப்பம் ஆகியவற்றிற்கான தனிப்பட்ட ஒப்புகையை பெற வேண்டும் என்றும் உயிலில் சாட்சிக் கையொப்பமிடும் ஒவ்வொரு சாட்சியும் உயில் எழுதி வைப்பவரின் முன்னிலையில் கையொப்பம் இட வேண்டும் என்றும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாட்சிகள் முன்னிலையாகியிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்றும், சான்றொப்பம் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டப் பிரிவை தெளிவாக படித்துப் பார்த்தால், ஓர் உயிலை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கு, அந்த உயில் எழுதப்பட்டது மற்றும் அந்த உயிலில் சான்று கையொப்பமிட்டுள்ளது ஆகிய இரண்டு செயல்களும் நிரூபிக்கப்பட வேண்டும் என்பது நன்றாக தெரிய வரும்.

மாண்புமிகு உச்சநீதிமன்றம் " H. வெங்கடாசல ஐயங்கார் Vs  B. N. திம்மஜம்மா மற்றும் பலர் (AIR-1959-SC-443)" என்ற வழக்கின் தீர்ப்பு பத்தி 19 ல், ஓர் உயிலுக்கும் மற்ற ஆவணங்களுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. மற்ற ஆவணங்களை போல் அல்லாமல், உயில் ஆவணம் அதனை எழுதி வைத்தவர் இறந்ததற்கு பிறகு தான் ஊர்ஜிதத்திற்கு வரும். எனவே ஒரு உயில் ஆவணம் நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்படும் பொழுது அந்த உயிலை எழுதி வைத்தவர் இவ்வுலகத்தை விட்டு சென்று விடுவதால், அந்த உயில் இறந்து போனவரால் எழுதப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது குறித்து அந்த இறந்து போன நபர் சாட்சியம் அளிக்க முடியாது. ஆகையால் ஓர் ஆவணத்தை மெய்பிப்பதற்காக ஒரு நீதிமன்றம் எத்தகைய விசாரணையை மேற்கொள்ளுமோ, அதுபோன்றதொரு விசாரணையை உயிலை மெய்பிப்பதற்கான விசாரணையை நீதிமன்றம் மேற்கொள்ள ஆரம்பிக்கிறது. அந்த வகையில், உயிலை எழுதி வைத்தவர் அந்த உயிலை எழுதி வைக்கக்கூடிய திட சிந்தனையிலும், மனப்பூர்வமாகவும் அவருடைய செயலின் தன்மையை உணர்ந்து கொண்டவராகவும் இருந்துள்ளார் என்பதை நீதிமன்றம் மனநிறைவு அடையும் வகையில், அந்த உயிலின் மூலம் பயன்பெறக்கூடிய நபர் நிரூபிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்துகிறது. அந்த உயிலை எழுதி வைத்தவர், அந்த உயில் எழுதப்பட்ட போது, திடமான மனநிலையுடன் இருந்தார் என்பதையும் அந்த உயிலின் தன்மையை புரிந்து கொண்டு, அவர் அதில் கையொப்பம் செய்துள்ளார் என்பதையும் உயிலின் மூலம் பயன்பெறக்கூடிய நபர் நிரூபிக்கும் நிலையில், அவருக்கு சாதகமான ஓர் உத்தரவினை நீதிமன்றம் பிறப்பிக்கும். உயிலின் மூலம் பயன்பெறக்கூடிய நபருக்கு தான் அந்த உயிலை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது என்று கூறியுள்ளது.

இதே கருத்தை உச்சநீதிமன்றம் " காசிபாய் Vs பார்வதி பாய் (1995-2-CTC-476 & 1995-6-SCC-213)" என்ற வழக்கிலும் கூறியுள்ளது.

ஜீவனாம்சம் கேட்டு கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ்

ஜீவனாம்சம் கேட்டு கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் மனுதாக்கல் செய்து அதில் ஒரு உத்தரவையும் பெற்றுள்ள மனைவி திரும்பவும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் மனுதாக்கல் செய்து கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியுமா?

வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் திரு. T. லஜபதிராய் அவர்கள் தன்னுடைய வாதத்தில், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20(1)(d) ன் கீழ் ஜீவனாம்சம் வழங்கும்படி உத்தரவினை பிறப்பிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்டார். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய பிரிவுகள் என்றும்,பாதிக்கப்பட்டவர் கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் அல்லது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் என இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவின் கீழ் ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறினார்.

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20(1)(d) ல் கூறப்பட்டுள்ளதை பார்க்கும் பொழுது பிரிவு 20 ன் கீழ் வழங்கப்படும் பொருளாதார நிவாரணத்தில் ஜீவனாம்சம் அளிக்கும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் அடங்கும். எனவே குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ன் கீழ் ஜீவனாம்சம் வழங்கி ஓர் உத்தரவினை குற்றவியல் நடுவர் பிறப்பித்திருந்தாலும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் பொருளாதார நிவாரணத்தை வழங்கி மற்றொரு உத்தரவை குற்றவியல் நடுவர் பிறப்பிப்பதற்கு எந்த தடையும் இல்லை. அவ்வாறு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவானது ஏற்கனவே கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலிருந்து மாறுபட்ட ஒரு உத்தரவாக இருக்கக்கூடாது.

தனக்கு கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் வழங்கப்பட்டுள்ள ஜீவனாம்ச தொகையை உயர்த்த வேண்டும் என்று மனைவி விரும்பினால் அவர் எந்த குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றாரோ அந்த நீதிமன்றத்தில் ஜீவனாம்ச தொகையை உயர்த்தி தரக்கோரி கு. வி. மு. ச பிரிவு 127 ன் கீழ் மனுதாக்கல் செய்ய வேண்டும். ஜீவனாம்சம் கோரி கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஒரு குற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் செயல்படும் மற்றொரு குற்றவியல் நடுவரால் எந்த மாறுதலும் செய்ய இயலாது. எனவே குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் வழங்கப்படும் பொருளாதார நிவாரணம் என்பது கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஏற்கனவே ஜீவனாம்சம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாறுதல் செய்யப்பட்ட ஓர் உத்தரவாக கருத முடியாது.

ஒரு மனைவி கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஒரு உத்தரவை பெற்றிருப்பாரேயானால், அவரை அவருடைய கணவர் நிராகரித்து விட்டார் அல்லது பராமரிக்க தவறி விட்டார் அல்லது மறுத்து விட்டார் என்ற சங்கதிகளை அவர் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார் என்று கருத வேண்டும். ஏற்கனவே கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் பெறப்பட்டுள்ள உத்தரவோடு கூடுதலாக குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் ஓர் உத்தரவினை பெற மனைவி விரும்பினால், கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஏற பெறப்பட்ட உத்தரவிற்கு பிறகு, அவருடைய கணவர் குடும்ப வன்முறை செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்ற புதிய குற்றச்சாட்டுகளை மனைவி நிரூபிக்க வேண்டும். கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் மீண்டும் மனுத்தாக்கல் செய்ய முடியாது. ஏற்கனவே கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் பெறப்பட்டுள்ள உத்தரவோடு, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் ஒரு உத்தரவை மனைவி பெற விரும்பினால், கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு பிறகு, அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், குடும்ப வன்முறைகள் குறித்து நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்தால் தான் கூடுதல் ஜீவனாம்சம் தொகையை குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் மனைவி பெற முடியும். எனவே கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஏற்கனவே ஓர் உத்தரவினை மனைவி பெற்றிருந்தாலும் கூட, குடும்ப வன்முறையால் பின்னர் அந்த மனைவி பாதிக்கப்பட்டிருந்தால் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் பொருளாதார நிவாரணங்களை பெறுவதற்கு இயலும்.

இது சம்பந்தமாக குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 36 ல் கூறப்பட்டுள்ளவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சட்டத்திலுள்ள பிரிவுகள் தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டப் பிரிவுகளுக்கு கூடுதலான, இணையான சட்டப் பிரிவுகளாகும். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ஆனது கு. வி. மு. ச பிரிவு 125 க்கு கீழான ஒரு பிரிவு அல்ல. கணவர் தனது மனைவியை நிராகரித்தால் அல்லது பராமரிக்க மறுத்தால் மனைவி கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் அவருடைய நிவாரணத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இவ்வாறு ஒரு மனுவை தாக்கல் செய்ததற்கு பிறகு, அதே வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் ஒரு மனுவை தாக்கல் செய்ய முடியாது. அதேபோல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் மனுதாக்கல் செய்துவிட்டால் அதே வாக்குமூலத்தின் அடிப்படையில் கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் மற்றொரு வழக்கை தாக்கல் செய்ய முடியாது. மனைவியால் கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அதே குற்றச்சாட்டுகளுடன் அதே வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் மற்றொரு மனுவை தாக்கல் செய்ய முடியாது. இதே நிலை தான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ன் கீழ் ஏற்கனவே ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டாலும் ஏற்படும்.

கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஏற்கனவே ஒரு மனுவை தாக்கல் செய்து ஓர் உத்தரவினை பெற்றிருந்தால், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு பின்னர் நடைபெற்ற குடும்ப வன்முறை சம்பவத்திற்காக மற்றொரு மனுவை குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யலாம் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. RC. NO - 453/2014, DT - 28.7.215

Prakash Vs Deepa and One another

2015-4-MLJ-CRL-352

அரசு நிலம் ஆக்கிரமிப்பு 

Penulis : A Govindaraj on 15/11/2015 | 20:39

பொது உபயோக இடம் எதற்காக ஒதுக்கப்பட்டதோ அதற்காகவே மட்டும் பயன்படுத்தபட வேண்டும். மேலும் அந்த பொது உபயோக இடத்தில் நடக்கும் எந்த செயலும் இலவச நோக்கமாக அமைய வேண்டும். 

அந்த பொது உபயோக இடத்தை பாதுகாத்து வருவது என்பது நகராட்சி மற்றும் மாநகராட்சியின் கடமையாகும்.

லே-அவுட் ப்ளாட்டுகளில் பொது உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தை மருத்துவமனை கட்ட 1980-ல் வாங்கி முறையாக வேலி அமைக்கப்பட்டு அதற்கு நில உரிமையாளர்கள் வரியும் கட்டி வருகின்றார்கள். பின்னர் மாநகராட்சி 2008-ல் அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று போர்டு வைக்கின்றார்கள். அந்த போர்டை அகற்ற கோரி நில உரிமையாளர்கள் நீதிப்பேராணை தாக்கல் செய்கின்றார்கள். அந்த நீதிப்பேராணை தள்ளுபடியாகின்றது.

நில உரிமையாளார்கள் மேல்முறையீடு செய்கின்றார்கள்..மேல்முறையீட்டில், 

மாநகராட்சியானது அந்த இடம் லே-அவுட் அந்த, அப்ருவல் செய்யும்போது பொது உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்டது. தற்போதை நில உரிமையாளருக்கு விற்ற முந்தைய நில உரிமையாளர் லேஅவுட் அப்ருவல் ஆனதும் சட்டப்படியான உரிமையாளர் என்ற தகுதியை இழந்து விடுகின்றார் (Ceases to be a legal owner) மேலும் இந்த இடமானது அந்த லேஅவட்டில் வசிப்பவர்களின் நலனுக்காகவும் மற்றும் பொது மக்களின் நலனுக்காக ஒதுக்கபட்டவை என வாதாடுகின்றார்கள். .

மனுதாரர் அந்த இடத்தில் மருத்துவமனை கட்டி ஒரு 50 சதவீத மருத்துவ வசதி இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்படும் என்று ஒரு அபிடாவிட்டு தாக்கல் செய்கின்றார். . மாண்புமிகு நீதியரசர்கள் திரு. பால் வசந்தகுமார் மற்றும் திரு.ரவிச்சந்திரபாபு அடங்கிய அமர்வானது, 50 சதவீதம் மட்டும் பொதுமக்களுக்காகவும் மற்ற 50 சதவீதம் நிலஉரிமையாளர்களின் நன்மைக்காக என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி முந்தைய ஒருமை நீதியரசரின் ஆணையை உறுதி செய்கின்றது.

கருத்து:

லே-அவுட்களில் பொது உபயோகத்திற்காக ஓதுக்கபட்ட இடங்களை விற்பதற்கு அந்த லே-அவுட்டை பிரித்து விற்பனை செய்தவர், லே-அவுட் பிரித்து அதில் ஒரு ப்ளாட்டை விற்பனை செய்ததும் அவர் சட்டப்படியான உரிமையாளர் எனும் தகுதியை இழந்துவிடுகின்றார். - அவருக்கு பின்னர் அவரிடம் இருந்து யவரும் நிலம் வாங்கினாலும் அவர் முறையான சட்டப்படியான உரிமையாளராகமாட்டார்.- பொது உபயோக இடம் எதற்காக ஒதுக்கப்பட்டதோ அதற்காகவே மட்டும் பயன்படுத்தபட வேண்டும்.- மேலும் அந்த பொது உபயோக இடத்தில் நடக்கும் எந்த செயலும் இலவச நோக்கமாக அமைய வேண்டும். அந்த பொது உபயோக இடத்தை பாதுகாத்து வருவது என்பது நகராட்சி மற்றும் மாநகராட்சியின் கடமையாகும்..

பொது உபயோக இடங்களை பற்றிய முழுமையான கருத்தை இந்த [ 2013 ] 8 MLJ Page-257 ] தீர்ப்பில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

( இந்த தீர்ப்பில் பல முன் தீர்ப்புகள் எடுத்து விவாதிக்ககப்ட்டுள்ளது.

Discussed Judgments..
Bangalore Medical Trust -vs- B.S. Muddappa.

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wT2UtbnNrRS1YNTA/view?usp=sharing

K. Rajamani -vs- Alamunagar Residents' Welfare Association.

Sri Devi Nagar Residents Welfare Association, rep. by its President G.P. Godhanavalli, Coimbactore.
-vs- Subbathal.

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wVVlBbG5ldERXMGs/view?usp=sharing

அரசியலமைப்பில் முக்கிய வழக்குகள்

அரசியலமைப்பில் முக்கிய வழக்குகள்
-----------------------------

#முகவுரை பற்றிய வழக்குகள்
----------------------------
பெருபாரி-1960
கேசவநந்த பாரதி - 1973
S.R.பொம்மை - 1994
LIC இந்தியா வழக்கு- 1995

#அடப்படைஉரிமைகள் பற்றிய
வழக்குகள்
----------------------------
A.K.கோபாலன் - 1950
மேனகா காந்தி - 1978

#அரசியலமைப்புசட்டத்திருத்த
அதிகார வரம்பு பற்றிய வழக்குகள்
----------------------------
கோலக்நாத் - 1967
கேசவ நந்த பாரதி - 1973
மினர்வா மில்ஸ் வழக்கு - 1980

#பொதுநல வழக்கு
தொடர்தல் பற்றிய
வழக்குகள்
--------------------------
பாரதி சோஷித் கரம்சாரி சங்
வழக்கு - 1981
பந்துவா முக்தி மோர்ச்சா வழக்கு -
1984
ஹீசைரா கார்டூன் வழக்கு

#அடிப்படை உரிமைகள் மற்றும் # DPSP
................
செம்பாக்கம் துரைராஜன்
வழக்கு - 1951
மினர்வா மில்ஸ் வழக்கு - 1980

#மண்டல்கமிஷன் பற்றிய வழக்கு
----------------------------
இந்திராஷானி வழக்கு - 1992

#விதி_18 பற்றிய வழக்கு
----------------------------
பாலாஜி ராகவன் வழக்கு

#BasicStructure of Constitution
பற்றிய வழக்கு
---------------------------
சங்கரி பிரசாத் வழக்கு - 1951
சாஜன் சிங் வழக்கு- 1965
கோலக்நாத் வழக்கு - 1967
அரசியலமைப்பில் முக்கிய வழக்குகள்
-----------------------------

#முகவுரை பற்றிய வழக்குகள்
----------------------------
பெருபாரி-1960
கேசவநந்த பாரதி - 1973
S.R.பொம்மை - 1994
LIC இந்தியா வழக்கு- 1995

#அடப்படைஉரிமைகள் பற்றிய
வழக்குகள்
----------------------------
A.K.கோபாலன் - 1950
மேனகா காந்தி - 1978

#அரசியலமைப்புசட்டத்திருத்த
அதிகார வரம்பு பற்றிய வழக்குகள்
----------------------------
கோலக்நாத் - 1967
கேசவ நந்த பாரதி - 1973
மினர்வா மில்ஸ் வழக்கு - 1980

#பொதுநல வழக்கு
தொடர்தல் பற்றிய
வழக்குகள்
--------------------------
பாரதி சோஷித் கரம்சாரி சங்
வழக்கு - 1981
பந்துவா முக்தி மோர்ச்சா வழக்கு -
1984
ஹீசைரா கார்டூன் வழக்கு

#அடிப்படை உரிமைகள் மற்றும் # DPSP
................
செம்பாக்கம் துரைராஜன்
வழக்கு - 1951
மினர்வா மில்ஸ் வழக்கு - 1980

#மண்டல்கமிஷன் பற்றிய வழக்கு
----------------------------
இந்திராஷானி வழக்கு - 1992

#விதி_18 பற்றிய வழக்கு
----------------------------
பாலாஜி ராகவன் வழக்கு

#BasicStructure of Constitution
பற்றிய வழக்கு
---------------------------
சங்கரி பிரசாத் வழக்கு - 1951
சாஜன் சிங் வழக்கு- 1965
கோலக்நாத் வழக்கு - 1967

*பெண் வழக்கறிஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள்?*

*பெண் வழக்கறிஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள்?*

சில வருடங்களாக முன் எப்போதைக் காட்டிலும் சட்டக்கல்லூரிகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், இதரத் துறைகளைப் போலவே சட்டம் மற்றும் நீதித்துறையில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது.

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிளுக்கு இணையான தரத்தில் நமது சட்டக்கல்லூரிகள் இயங்குகிறதா?  என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூற முடியும். அதற்கு அரசாங்கம் மட்டுமே காரணம் என்பதைக் காட்டிலும் மாணவர்களின் மனநிலையும் காரணமாகிறது.

சட்டக் கல்லூரியில் நுழையும் போதே, நம்மையாரும் கேள்வி கேட்கக் கூடாது, நாம் எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்ற மனப்பான்மை மாணவர்களுக்கு வந்துவிடுகிறது. இதைக் கட்டுப்படுத்த கல்லூரி நிர்வாகம் தவறிவிடுகிறது. இதனால் ஒரு தரமான சட்டக் கல்வியை பெற இயலாமல் போய்விடுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சட்டம் படிக்கும்; பெண்களின் வேலைவாய்ப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதில் பலரும் முதல் தலைமுறை நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதற்காக ஒரு வழக்கறிஞராக வரவேண்டும் என்று எண்ணினார்களோ, அந்த இலக்கை அவர்கள் அடைவதற்கு என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அவர்கள் முன்னரே அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

சட்டக்கல்லூரிக்கு வரும்போது பெண்களின் கனவு என்னவாக இருக்கிறது?. ஒரு வழக்கறிஞராக பார்கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு நீதிமன்றத்திற்கு வரும்போது அவர்களின் கனவு என்னவாக இருக்கிறது என்பதையெல்லாம் நாம் கவனித்தாக வேண்டும்.

இதரத் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களது அலுவலகத்திற்குச் சென்று வருவதைப் போல, பெண் வழக்கறிஞர்கள் இயல்பாக நீதிமன்றத்திற்கு வந்து செல்லமுடியாது. வழக்கறிஞராகப் பதிவு செய்தவுடன் முதலில் ஒரு அலுவலகத்தைத் தேர்ந்தெடுத்து பயிற்சி வழக்கறிஞராக நீதிமன்றத்திற்குள் நுழைவதற்கே பெரிய சிரத்தை எடுக்க வேண்டியுள்ளது.

பொதுவாக வழக்கறிஞர் அலுவலகங்கள் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும்தான் முழுமையாக இயங்கும். மற்ற நேரங்களில் நீதிமன்றங்களுக்குச் சென்றாகவேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரை மாலை நேரத்தில் வீட்டிற்குத் திரும்பியாக வேண்டும், விடுமுறை நாட்களில் வீட்டு வேலைகளைச் செய்தாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடம் இயல்பாக இருக்கிறது. நமது சமூகக் கட்டமைப்பும் அப்படித்தான் உள்ளது. இதில் இருந்து பெண்கள் அவ்வளவு எளிதில் விடுபட்டு வந்துவிட முடியாது.

பெண் வழக்கறிஞர்கள் முதலாவதாக எதிர்கொள்ளும் சிக்கல் அவர்களது திருமணம் குறித்த பெற்றோர்களின் கவலைதான். பெண்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், பெற்றோர்கள் முன்னால் உள்ள மிகப்பெரிய கடமை மகளின் திருமணம் பற்றியதாகத்தான் இருக்கிறது.

சட்டம் படித்த மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. பல பெற்றோர்கள் “தெரியாத்தனமாக லாகாலேஜில் சேர்த்துட்டேன், இப்ப மாப்பிளை பார்ப்பது சிக்கலாக இருக்கிறது” என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் மீது நமது பெற்றோர்கள் அதிகம் அன்பு செலுத்துவதுதான் இத்தகைய கவலைகளுக்குக் காரணமாகிறது.

அதிகம் பேசுவதையே விரும்பாத சமூகத்தில் ஒரு பெண் சட்டம் பேசினால் எந்த மாதிரியான எதிர்வினைகள் இருக்கும் என்பதும், அவர்கள் எதிர்நோக்கும் திருமண வாழ்வு எப்படி அமையும் என்பதும் பெற்றேர்களின் கவலைக்கு அடித்தளமாகிறது. வழக்கறிஞராக உள்ள பெண்களுக்கு மட்டுமல்ல, வழக்கறிஞராக உள்ள ஆண்களுக்கும் திருமண வாழ்வு என்பது எளிதில் அமைவதில்லை. ஒருசிலர் இதில் விதிவிலக்காக இருக்கலாம்.

காலம் வேகமாக மாறிவருகிறது அவரவர் கொள்கைகளுக்கும் மனநிலைக்கும் ஏற்றார் போல் தங்கள் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்ளும் நிலை வந்து கொண்டிருக்கிறது. ஆனால் பெற்றோர்கள் இன்னமும் அத்தகைய மனநிலைக்குத் தயாராகவில்லை. அது அவர்கள் பிள்ளைகளின் மீதான அக்கறையின் வெளிப்பாடாகவே தொடர்கிறது.

பணிநேரமும், ஊதியமில்லா வாழ்க்கையும் பெண் வழக்கறிஞர்களின் பெற்றோர்களை மேலும் மிகுந்த கவலைக்கு உள்ளாக்கிவிடுகிறது. உற்சாகமாகவும் தன்னம்பிக்கையோடும் நீதிமன்றத்திற்குவரும் பெண் வழக்கறிஞர்கள் சிறிது காலத்திலேயே மனச்சோர்விற்கு ஆளாகிவிடுகின்றனர். அதற்கு பெற்றோர்களின் கவலைகள் முதன்மையான காரணமாக இருந்தாலும், தனக்கென ஒரு வழக்கை எடுத்து நீதிமன்றங்களில் அவர்கள் வாதத்தை முன்வைப்பதற்குள் பல நடை முறைச் சிக்கல்களைக் கடந்தாக வேண்டியுள்ளது.

வழக்குத் தொடர்பாக அரசு அலுவலகங்களுக்கோ அல்லது காவல் நிலையங்களுக்கோ செல்லும் போது ஏளனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாக வேண்டியுள்ளது. இவைகளைக் கடந்து நீதிமன்றத்திற்கு வந்தால், பல நீதிமன்றங்களில் பெண்களுக்கு என்று தனியாக ஓய்வறைகள் மற்றும் கழிப்பறைகள் கிடையாது. இருக்கும் சில இடங்களிலும் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை.

சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. புதிய கட்டடங்களில் பெண்களுக்கு என்று அறைகள் ஒதுக்கியிருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதலான விசயமாக இருந்தாலும் அவைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. பல கட்டங்களில் தண்ணீர் வசதி என்பதே இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்கள் நீதிமன்றத்திற்கு வந்து செல்வது என்பது எவ்வளவு சவாலானது என்பதை உணர முடியும்.

என்னோடு சட்டக் கல்லூரியில் படித்த ஒரு பெண் ஓராண்டு காலம் எந்த மூத்த வழக்கறிஞருடைய அலுவலகத்திற்கும் செல்லாமல் தினமும் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்து, வழக்கறிஞர்களுடைய வாதத்தையும், அவர்கள் குறுக்கு விசாரணை செய்யும் முறையையும் கவனித்து வந்தாள். “ஏதாவது ஒரு அலுவலகத்தில் சேர்ந்துவிடலாமே” என்று நான் கேட்டபோது “எனக்கு யார், எப்படி, என்று எதுவும் தெரியாது. எனக்குத் திருப்தி இருந்தால் மட்டுமே நான் ஒரு அலுவலகத்தை தேர்ந்தெடுக்க முடியும்” என்று தெளிவான மன நிலையில் கூறினாள். அவளுடைய குடும்பம் சாதாரண எளிமையான குடும்பமாக இருந்த போதிலும், பெற்றோர்கள் அந்தப் பெண் மீது நம்பிக்கை வைத்திருந்தனர்.

அந்தப் பெண்ணும் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவளாகவே இருந்து வந்திருக்கிறாள். இளங்கலை அறிவியலில் தங்கப் பதக்கம் பெற்றவள் வேறு ஏதாவது துறையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம், அவளுக்கு நல்ல ஊதியத்துடன் ஒரு பணி கிடைத்திருக்கும். ஆனால் அவள் இந்திய நீதித்துறையில் ஒரு உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாள். அது அவளின் லட்சியமாகவே இருந்தது.

ஓராண்டுகாலம் நீதிமன்றப் பணிகளை கவனித்து வந்த பிறகு, மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிவது தனக்கு உகந்தது அல்ல என்று முடிவு செய்து சென்னை நோக்கிப் பயணப்பட்டு விட்டாள். தனக்குக் கிடைத்த கீழமை நீதிமன்ற நீதிபதி பதவியையும் அவள் மறுத்திருக்கிறாள். மாவட்ட நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி என்ற கனவோடு அவளது பயணம் இன்றும் தொடர்கிறது. அவளைப் போல துணிச்சல் எல்லோருக்கும் வராது, இயலாது. ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே தங்களது கனவுகளையும் திட்டங்களையும் அமைக்க வேண்டியிருக்கிறது.

எந்தவொரு முடிவையும் தானாகவே எடுக்கும் வாய்ப்பு இந்தியப் பெண்களுக்கு மறுக்கப்பட்டே வருகிறது. இதில் பெண் வழக்கறிஞர்களும் விதிவிலக்கல்ல. திருமணம், ஊதியம், வரையரையில்லா வேலைநேரம் என பலமுனை நெருக்கடிகளைச் சந்திக்கும் பெண்கள் நீதிமன்றத்திற்கு வந்த ஓராண்டிலேயே ஊதியத்திற்கு உத்தரவாதம் உள்ள ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர்.

எனக்குத் தெரிந்து பலர் இந்தத் துறையை விட்டே சென்று விட்டனர். சிலர் அரசு வழக்கறிஞர் பணியிடத்திற்கோ அல்லது கீழமை நீதிமன்ற நீதிபதி பணியிடத்திற்கோ நடக்கும் தேர்வுகளுக்கு தங்களைத் தயார்படுத்தும் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றுவிட்டனர்.

இதரத் துறைகளைக் காட்டிலும் நீதித்துறைக்கான போட்டித் தேர்வுகளில், போட்டி சற்றுக் குறைவு என்பது இந்தத் துறையில் உள்ள பெணக்ளுக்கு சற்று ஆறுதலான விசயமாகும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு இருப்பதால் சற்று முயற்சி செய்தாலே போதும், ஒரு குறிப்பிட்ட இடத்தை பெற்றுவிட முடியும். அவ்வாறு நீதித்துறையில் சிறந்த இடத்திற்கு பல பெண்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த நிலையை எட்ட எவ்வளவு சிக்கல்களையும் இன்னல்களையும் சந்தித்திருப்பார்கள் என்பது வழக்கறிஞராக பணியாற்றுபவர்களுக்குத்தான் தெரியும்.

பெண்களுக்கென்றே உள்ள சில குடும்பக் கடமைகளையும் அவர்கள் நிறைவேற்றியாக வேண்டும். இப்படிப்பட்ட இன்னல்களையும் துயரங்களையும் தாண்டித்தான் பல பெண்கள் சிறந்த வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்கள். வழக்குகளைத் தயார் செய்வது, அன்றாட அலுவலகப் பணிகளை முறைப்படுத்துவது, நீதிமன்றங்களுக்குச் சென்று வருவது என தொடர்ந்து இயங்கும் அவர்களுடைய மனஉறுதியையும் தன்னம்பிக்கையையும் நாம் பாராட்ட வேண்டும். பெயர் குறிப்பிடும்படியான இடத்திற்கு வருவதற்குள், அவர்கள் இழந்த வாழ்வை யாராலும் திருப்பித் தரமுடியாது.

இதெல்லாம் தெரிந்து தான் பெண்கள் சட்டம் படிக்கிறார்களா?. அல்லது அரசு வழக்கறிஞராகவோ நீதிபதியாகவோ தேர்வாகிவிட முடியும் என்ற நம்பிக்கையில் வருகிறார்களா? அல்லது திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் பார்த்து சமூக அந்தஸ்திற்காக வருகிறார்களா?. என்ற கேள்வி எழாமல் இல்லை.

பணத்திற்காகவோ, அந்தஸ்திற்காகவோ மட்டும் வழக்கறிஞராக வந்திருப்பார்கள் என்று கருதிவிட முடியாது. ஏனெனில் அந்த இரண்டும் இந்தத் துறையில் அவ்வளவு எளிதில் பெற்றுவிடக் கூடிய ஒன்றல்ல. அது அவர்களுக்கும் தெரிந்திருக்கும். ஏதேனும் ஒரு சமூகக்காரணி தான் அவர்களை ஒரு வழக்கறிஞராக மாற்றியிருக்கும். அதில் வெற்றி பெறுகிறார்களா? என்பதில்தான் அவர்களது வாழ்வின் அர்த்தம் அடங்கியிருக்கிறது.

இதரத் துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை நாம் எளிதில் பட்டியலிட்டு விடமுடியும். ஆனால் வழக்கறிஞர் தொழிலும், நீதித்துறையிலும் அவ்வாறு உடனடியாக பட்டியலிட முடியாத அளவில்தான் இந்தியப் பெண்களின் நிலை இருக்கிறது.

தொடரும்….