Monday, 9 April 2018

நீதிமன்ற தீர்ப்பின்படி

நீதிமன்ற தீர்ப்பின்படி வாதி தீர்ப்புத் தொகையை வசூலிப்பதற்கு முதலில் பிரதிவாதியின் சொத்தை பற்றுகை செய்யத்தான் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமா? அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முதலில் மனுத்தாக்கல் செய்ய முடியாதா?

நீதிமன்ற தீர்ப்பின்படி வாதி தீர்ப்புத் தொகையை வசூலிப்பதற்கு முதலில் பிரதிவாதியின் சொத்தை பற்றுகை செய்யத்தான் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமா? அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முதலில் மனுத்தாக்கல் செய்ய முடியாதா?

வெங்கடாசலம் என்பவர் ரூ. 32,600-ஐ வசூல் செய்வதற்காக வீராசாமி என்பவர் மீது ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்பிறகு வெங்கடாசலம், வீராசாமியை கைது செய்து பணத்தை வசூல் செய்து தரும்படி கேட்டு ஒரு நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவிற்கு வீராசாமி பதிலுரை தாக்கல் செய்தார். அதில் தனது சொத்தை பற்றுகை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, சிறையில் அடைப்பதற்கு நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்திருப்பது தவறு என்று கூறி நிறைவேற்றுதல் மனுவை தள்ளுபடி செய்யுமாறு கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி வீராசாமி 14.8.2009 ஆம் தேதிக்குள் தீர்ப்புத் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

மேற்படி உத்தரவை எதிர்த்து வீராசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.

No comments:

Post a Comment