தவறுதலாக வழக்குகள் பதிவு, போலீசுக்குஐகோர்ட் உத்தரவு
சென்னை:'அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடும்என கருதி, ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது'என, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுஉள்ளது. இதுகுறித்து, போலீஸ்நிலையங்களுக்கு,டி.ஜி.பி., அறிவுறுத்த வேண்டும்என்றும் தெரிவித்துள்ளது.
பொது அமைதிக்கு ஒருவர் பங்கம் விளைவிக்ககூடும் என கருதினால், அவ்வாறு செய்யாமல்இருக்க, உரிய உத்தரவாதம் அல்லது ஜாமின்கோர, தாசில்தாருக்கு அதிகாரம் உள்ளது.குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு, 107 இதற்குவகை செய்கிறது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, வடக்குபாளையத்தை சேர்ந்தவர், ராஜ்குமார். இவர் உள்ளிட்டமூவர் மீது, தாராபுரம் போலீசில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதை ரத்து செய்யக் கோரி, சென்னைஉயர் நீதிமன்றத்தில் ராஜ்குமார் தாக்கல் செய்த மனு:
குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு, 107 ன்கீழ் குற்றம்புரிந்ததாக, எங்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின் கீழ், வழக்குபதிவு செய்ய முடியாது. இந்த பிரிவின் கீழ் நடவடிக்கைஎடுக்க, போலீசாருக்கு அதிகாரம் இல்லை.எனவே,வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில்கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர்,ஜி.கார்த்திகேயன், ''அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தகூடும் என தகவல் வந்ததாக கூறி, குற்ற வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, வழக்கு பதிவு செய்யமுடியாது. பல போலீஸ் நிலையங்களில், இவ்வாறுதவறுதலாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது,''என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி சி.டி.செல்வம்பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் வழக்கறிஞர், கார்த்திகேயன்வாதம், சரியாக உள்ளது. முதல் தகவல் அறிக்கைபதிவேட்டில், குற்றம் புரியக்கூடும் என,குறிப்பிடக்கூடாது. தாசில்தார் மேற்கொள்ள வேண்டியநடவடிக்கைக்கான தகவலை, போலீசார் பெற்றால்,அதை, தனியாக ஒரு பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.பின், தாசில்தாரின் நடவடிக்கைக்காக, அனுப்பவேண்டும்.
போலீசாருக்கு தகுந்த உத்தரவுகளை பிறப் பிக்கஏதுவாக, இந்த உத்தரவின் நகலை, டி.ஜி.பி.,க்குஅனுப்பலாம். இந்த வழக்கை பொறுத்த வரை,தாராபுரம் போலீஸ் பதிவு செய்த வழக்கு, ரத்துசெய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ்
No comments:
Post a Comment